Tuesday, February 19, 2008

நூல்

புத்தகத்திற்கு
'நூல்' என்று பெயர்
வைத்தவர்கள்
புத்திசாலிகள்

நூல்
ஆடைகளைத் தயாரிக்கிறது
புத்தகம்
மனிதர்களைத் தயாரிக்கிறது

ஒன்று பஞ்சிலிருந்து
வந்தது;
மற்றொன்று
நெஞ்சிலிருந்து வந்தது

ஒன்று
கிழிந்த துணிகளைத் தைக்கிறது;
மற்றொன்று
கிழிந்த மனிதர்களைத் தைக்கிறது

ஏதோ ஒரு வகையில்
நூலும் புத்தகமும்
நம்மைக் கட்டி வைக்கின்றன

நூல், புத்தகம்
இரண்டுக்கும்
முள் உறவுகள் உண்டு

புத்தகத்திலும்
உயிர்மெய் எழுத்துக்கள்;
நூல் ஆடைக்குள்ளும்
உயிர் மெய் எழுத்துக்கள்

*

1 comment:

கிருத்திகா Kiruthika said...

ஏதோ ஒரு வகையில்
நூலும் புத்தகமும்
நம்மைக் கட்டி வைக்கின்றன

அருமை கவி அவர்களே!