Tuesday, February 19, 2008

ஊடும் கவிதை

சொற்கள்
சன்னற் கம்பிகள்
அவற்றினிடையே
எப்போதோ
அரிதாகத் தோன்றும்
உன்முகம்

வார்த்தைகள்
உன்னை வரவேற்க
நான் தூவி வைக்கும் மலர்கள்;
நீ
வராமலும் போகலாம்

கவிதையே
துயிலில்
அனுமதியின்றி
வந்து செல்லும்
கனவு நீ

உன் ஊடலே
நம் நட்பை
நிரந்தரமாக்கி வைத்திருக்கிறது
*

1 comment:

Sathak Maslahi said...

வாவ்.. சூப்பர் வரிகள்