சொற்கள்
சன்னற் கம்பிகள்
அவற்றினிடையே
எப்போதோ
அரிதாகத் தோன்றும்
உன்முகம்
வார்த்தைகள்
உன்னை வரவேற்க
நான் தூவி வைக்கும் மலர்கள்;
நீ
வராமலும் போகலாம்
கவிதையே
துயிலில்
அனுமதியின்றி
வந்து செல்லும்
கனவு நீ
உன் ஊடலே
நம் நட்பை
நிரந்தரமாக்கி வைத்திருக்கிறது
*
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
வாவ்.. சூப்பர் வரிகள்
Post a Comment