Monday, February 18, 2008

ஒரு கவிதையைப் போல்

ஒரு கவிதையைப்போல் இரு
அளவாக
ஆழமாக
அர்த்தங்கள் ஆயிரம்
சுரக்கும் நயங்களோடு
இதயங்களில் நிரந்தரமாக
எழுதி வைக்கப்படும்
இறவாத சொற்களோடு
ஒரு கவிதையைப்போல் இரு

ஒரு பூவைப்போல் இரு
மென்மையோடு
மணத்தோடு
புதிரான வாழ்க்கையைப்
புன்னகையோடு எதிர்கொள்ளும்
வலிமையோடு
எவரிடத்தும் கடனாய் வாங்காத
இயற்கையான வர்ணங்களோடு
ஒரு பூவைப்போல் இரு
*

No comments: