ஒரு கவிதையைப்போல் இரு
அளவாக
ஆழமாக
அர்த்தங்கள் ஆயிரம்
சுரக்கும் நயங்களோடு
இதயங்களில் நிரந்தரமாக
எழுதி வைக்கப்படும்
இறவாத சொற்களோடு
ஒரு கவிதையைப்போல் இரு
ஒரு பூவைப்போல் இரு
மென்மையோடு
மணத்தோடு
புதிரான வாழ்க்கையைப்
புன்னகையோடு எதிர்கொள்ளும்
வலிமையோடு
எவரிடத்தும் கடனாய் வாங்காத
இயற்கையான வர்ணங்களோடு
ஒரு பூவைப்போல் இரு
*
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment