மரணமே
நீ மந்திரக் கம்பளம்;
உன்னைப் போர்த்திக்
கொண்டு
ஒவ்வொருவராய்
மறைந்து போகிறோம்
உன்னைத் தழுவுகிற
ஒவ்வொருவனுக்கும்
அமர வாழ்வு
ஆரம்பமாகிறது
எங்கள் மரணங்களை
முடிவுக்குக் கொண்டுவரும்
மரணமே
அன்பான் விருந்தாளியே
வா
உயிரைப் பரிமாறி
உன்னை உபசரிக்க
எல்லோரும்
காத்துக் கொண்டிருக்கிறோம்
*
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அருமை அய்யா
பிடித்தோ பிடிக்காமலோ
தெரிந்தோ தெரியாமலோ
உயிரை விருந்தளித்து
போர்த்திக்கொள்ளக் காத்திருக்கிறோம்
Post a Comment